News September 22, 2025
பழனி திருக்கோயில் நிர்வாகம் மிரட்டுவதாக புகார்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானம், தங்களை அச்சுறுத்தி விரட்டுவதாக தம்புரான் தோட்டத்தில் வசிக்கும் மக்களும் கடை உரிமையாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர் பழனி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அவர்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Similar News
News September 23, 2025
திண்டுக்கல் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 23-09-2025 செவ்வாய்க்கிழமை, உங்களுடன் ஸ்டாலின் முகாம், வேடசந்தூர் பேரூராட்சி, பாலகிருஷ்ணாபுரம், நிலக்கோட்டை ஊராட்சி,ஒட்டன்சத்திரம் நகராட்சி, ரெட்டியார் சத்திரம், வேடசந்தூர் நகராட்சி, உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசு தேவைகளுக்கு மனு அளித்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News September 22, 2025
திண்டுக்கல்: கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020- ஆம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக மாசானம் (50) என்பவரை பழனி அழகாபுரியை சேர்ந்த கருப்பசாமி மகன் பழனிசாமி (35) என்பவர் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு இன்று திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இன்று பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்து தீர்ப்பு.
News September 22, 2025
திண்டுக்கல்: மின் கம்பம் சேதமா..? உடனே புகார்!

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், “TNEB Smart Consumer App” மூலம் ‘Complaint’ ஆப்ஷனில் புகார் பதிவு செய்யலாம். அதோடு www.tangedco.org தளத்தில் Consumer Complaints-ல் புகார் அளிக்கலாம். மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்த புகாருக்கு 9443111912 என்ற எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் அழைக்கலாம்.