News September 22, 2025
ஆயுத பூஜை விடுமுறை.. நாளை முதல் சிறப்பு அறிவிப்பு

<<17708234>>தசரா<<>>, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, செப்.23-அக்.23 வரை சென்னை எழும்பூர்- தூத்துக்குடி இடையே இரு மார்க்கத்திலும் வாராந்திர ரயில் இயக்கப்படும். அதேபோல், செப்.28-அக்.26 வரை தாம்பரம்- நாகர்கோவில் இடையேயும், செப்.25-அக்.23 வரை சென்னை- கோவை போத்தனூர், <<17761102>>வேறு மார்க்கங்களிலும்<<>> சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
இது தெரியாமத்தான் இவ்வளவு நாளா இருந்துட்டேன்

திருமண வயது வந்தும், காதல் செய்ய தெரியாதவர்களே.. கொஞ்சம் இந்த கதையை கேளுங்க. மேட்ரிமோனி ஆப்பில் பேசத் தொடங்கிய 15 நிமிடங்களில் ‘இந்த மாசத்துலயே கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்று ஒரு பெண் ஷாக் கொடுத்ததாக இளைஞர் ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ‘அந்த சூட்சமத்தை எங்களுக்கும் சொல்லித் தாங்க’ என்றும், ‘15 நிமிஷத்துல அப்டி என்ன பேசிருப்பாங்க’ எனவும் கேட்டு வருகின்றனர்.
News September 23, 2025
தங்கமாக ஜொலிக்கும் ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட 3 மணி நேரத்தில் லைக்குகள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளது. இந்த போட்டோஸை மேலே இணைத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. பிடித்திருந்தா லைக் போடுங்க.
News September 23, 2025
பிராமணர் என்பதால் இட ஒதுக்கீடு இல்லை: நிதின் கட்கரி

கடவுள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவி என்னவென்றால், நான் ஒரு பிராமணன், இதனால் எனக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று காமெடியாக பலரிடம் கூறுவேன் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், எந்த மனிதரும் சாதி, மதம், மொழியால் உயர்ந்தவர் அல்ல, மாறாக அவர்களின் குணத்தாலேயே உயர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பிராமணர் குறித்த நிதினின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.