News September 22, 2025

சென்னையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

image

சென்னை எழும்பூர் அருகே பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை வடமாநில இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநில இளைஞர் இந்த பெண்ணின் முடியை பிடித்து தாக்குவதை கண்ட அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். தாக்கிவிட்டு மயங்கியது போல் நாடகம் ஆடிய இளைஞர் சைகோவா அல்லது மதுபோதையில் இப்படி செய்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 22, 2025

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு

image

காந்தி பிறந்த நாளான அக்.2-ஆம் தேதி, டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபடுவார்கள் என, மாநில சிறப்பு தலைவர் வழக்கறிஞர் கு. பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில், மதுக்கடைகளை மூடி, மாற்று பணி வழங்கவும், காலி மது பாட்டில்களை திரும்ப பெற, டாஸ்மாக் பணியாளர்களை கட்டாயப்படுத்த கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது

News September 22, 2025

விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணை

image

தமிழ்நாட்டு வீரர், வீராங்கனையருக்கு 3% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முதல்வர் மு. க ஸ்டாலின் செஸ் போட்டிகளில் சர்வதேச அளவில் சாதனைப்படைத்து வரும் வைஷாலி, மகளிர் கால்பந்து போட்டியில் சாதனை படைத்து வரும் சுமித்ரா உள்ளிட்ட நான்கு பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

News September 22, 2025

BREAKING: சென்னையில் சினிமா இயக்குநர் கைது

image

சென்னையில் மெத்தப்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்ததாக நடிகரும், சினிமா இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரை சேர்ந்த பவன்குமார், நெற்குன்றதை சேர்ந்த ஹாஷிக் பாஷா, ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 12 MDMA மாத்திரைகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!