News September 22, 2025

செங்கை: பீர் பாட்டிலால் அடித்து கொலை

image

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, அறையில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில், பாரதி கண்ணன் என்பவர் உயிரிழந்தார். ராஜன் (28) என்பவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலைக்கான காரணம் குறித்தும், குற்றவாளிகள் குறித்தும் மறைமலைநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 22, 2025

தலையில் ஹெல்மெட் அணியுங்கள் – பாதுகாப்பாக இருங்கள்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை: தலையை பாதுகாக்க தலையணியை அணிவது ஒவ்வொரு இருசக்கர வாகன ஓட்டுநருக்கும் கட்டாயம். விபத்து நேரங்களில் உயிர் காப்பதில் ஹெல்மெட் முக்கிய பங்கு வகிக்கிறது. சட்டம் மட்டுமல்ல, உங்கள் பாதுகாப்பும் ஹெல்மெட்டில் உள்ளது. ஆகையால், எப்போதும் தரமான ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுங்கள் .

News September 22, 2025

செங்கல்பட்டு: சிட்லபாக்கம் ஏரியில் கிடந்த சடலம்

image

தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பெரிய ஏரியில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சிட்லபாக்கம் M.G.R., நகர், பகுதியைச் சேர்ந்த ஏகவள்ளி என்பது தெரியவந்தது.

News September 22, 2025

செங்கல்பட்டு: நள்ளிரவில் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை

image

SP. கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் நெல்லையைச் சேர்ந்த பாரதி கண்ணன் (ம) தஞ்சாவூரை சேர்ந்த ராஜன் ஆகிய இருவரும் அறை எடுத்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பாரதி கண்ணன், ராஜன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சில மர்மநபர்கள் இருவரையும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் பாரதி கண்ணன் உயிரிழந்த நிலையில் ராஜன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!