News September 22, 2025
புதுக்கோட்டை: கல்லூரி கிணற்றில் விழுந்து ஒருவர் பலி

இலுப்பூரில் உள்ள தனியார் விவசாய கல்லூரியில் இலுப்பூர் புதுதெருவைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கல்லூரியில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணியை ஆய்வு செய்வதற்காக கிணற்றின் அருகே சென்ற தர்மராஜ் எட்டிப் பார்த்தபோது கால் தவறி நீர் இல்லாத கிணற்றில் விழுந்து பாறையில் அடிபட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News September 23, 2025
புதுக்கோட்டை மக்களே நாளை Power Cut!

புதுக்கோட்டை மக்களே நாளை 24.09.2025 ஆம் தேதி நமது புதுக்கோட்டையில் மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து பாக்கலாம்!
1.ஆலங்குடி
2.வடகாடு
3.புதுக்கோட்டை டவுன்
4.மழையூர்
ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் மாதாந்திர நின் விநியோக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஆய்விக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 23, 2025
புதுக்கோட்டை மக்களே நாளைய தினம் மறக்காதீங்க!

புதுக்கோட்டை மக்களே நாளை 24.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டலைன் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.கீரமங்கலம்
மாரியம்மன் கோவில் தி-மண்டபம்
2.கந்தர்வகோட்டை
பெரியக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம்,
3.திருமயம்
சின்னியம்மத்தாள் தி-மண்டபம், கோனாப்பட்டு
4.குன்றாண்டார் கோவில்
ஐ.எம். தி-மண்டபம், திருமலைராயபுரம்
5.கறம்பக்குடி
மீனாட்சி தி-மண்டபம், செம்பட்டி விடுதி
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 23, 2025
அவசர தேவைக்கு ரத்தம் கொடுத்த கொடையாளர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோகனசுந்தரம் என்பவரின் அவசர சிகிச்சைக்காக, O பாசிட்டிவ் இரத்தம் செப்டம்பர் 22 அவசரமாக தேவைப்பட்ட நிலையில், குருதிக்கூட்டின் அமைப்பிற்கு தொடர்பு கொண்ட மருத்துவர்கள் உடனடியாக வருகை தந்த மஜிமா குறித்த நேரத்தில் O+ குருதிக்கொடை அளித்து பேருதவி புரிந்துள்ளார். இதனால் மருத்துவர்கள் ரத்தம் அளித்தவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.