News September 22, 2025

விருதுநகர் பட்டாசு விபத்தில் அதிர்ச்சி தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் 2011 – 2024 வரை 14 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில் 379 பேர் உயிரிழந்த நிலையில் 320-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில், 2012-ம் ஆண்டு செப்.5 முதலிபட்டி விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் இன்று மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 23, 2025

விருதுநகரில் பெண்களுக்கு வேலை., ஆட்சியர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பணியிடத்தினை நிரப்புவதற்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் செப்.30 க்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

விருதுநகர்: மழை நெருங்குது! மக்களுக்கு அறிவுரை

image

விருதுநகரில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News September 23, 2025

சிவகாசியில் தடையை மீறி தொடரும் பட்டாசு விற்பனை

image

சிவகாசியில் தீபாவளிக்கான பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனிடையே ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை, விளம்பரத்திற்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்து மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனாலும் இந்த உத்தரவை மீறி ஏராளமான பட்டாசு விற்பனையாளர்கள் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!