News September 22, 2025
கோவை: விபத்தில் துடிதுடித்து பலி!

கோவை: காரமடை அடுத்துள்ள பிளிச்சி தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(22). ஆட்டோ டிரைவரான இவர் நேற்றிரவு(செப்.21) பெட்டதாபுரம் அருகே தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது சாலையோர தடுப்பின் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர அவரை மீட்டு மேட்டுப்பாளையம் ஜி.எச் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 22, 2025
கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை: ஒருங்கிணைந்த நீதிமன்ற மெயிலுக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை மிரட்டல் வந்தது. உடனே வெடிகுண்டு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சோதனை நடத்தினர். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. பின் இ-மெயில் அனுப்பிய நபர் யார் என சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 22, 2025
கோவை மாணவர்களுக்கு கல்விக் கடன்

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயா்கல்வி பயில்வதற்காக 29 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பவன் குமார் வழங்கினாா். பொள்ளாச்சி சாா் ஆட்சியா் (பொ) விஸ்வநாதன், கல்லூரி முதல்வா் கோவிந்தசாமி ஆகியோா் இருந்தனர்.
News September 22, 2025
கோவை – பெங்களூரு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று(செப்.21) விடுத்த செய்தி குறிப்பில், ’கேஎஸ்ஆா் பெங்களூரு – கோவை இடையிலான டபுள் டெக்கா் விரைவு ரயிலில் வரும் 22 ஆம் தேதி முதல் காா் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும். மறுமாா்க்கத்தில் கோவை – கேஎஸ்ஆா் பெங்களூரு டபுள் டெக்கா் விரைவு ரயிலில் வரும் 23 முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.