News September 22, 2025
செங்கல்பட்டு: சிட்லபாக்கம் ஏரியில் கிடந்த சடலம்

தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பெரிய ஏரியில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சிட்லபாக்கம் M.G.R., நகர், பகுதியைச் சேர்ந்த ஏகவள்ளி என்பது தெரியவந்தது.
Similar News
News September 22, 2025
செங்கை: பீர் பாட்டிலால் அடித்து கொலை

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, அறையில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில், பாரதி கண்ணன் என்பவர் உயிரிழந்தார். ராஜன் (28) என்பவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலைக்கான காரணம் குறித்தும், குற்றவாளிகள் குறித்தும் மறைமலைநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 22, 2025
செங்கல்பட்டு: நள்ளிரவில் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை

SP. கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் நெல்லையைச் சேர்ந்த பாரதி கண்ணன் (ம) தஞ்சாவூரை சேர்ந்த ராஜன் ஆகிய இருவரும் அறை எடுத்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பாரதி கண்ணன், ராஜன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சில மர்மநபர்கள் இருவரையும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் பாரதி கண்ணன் உயிரிழந்த நிலையில் ராஜன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
News September 22, 2025
செங்கல்பட்டில் மிஸ் பண்ணக்கூடாத 8 கோயில்கள்!

1.கந்தசுவாமி முருகன் கோவில், திருப்போரூர்
2.ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம், செங்கல்பட்டு
3.வல்லம் மலை குகைக் கோயில் , வல்லம்
4.ஞானபுரீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு
5.சதுர்புஜ ராமர் கோயில், செங்கல்பட்டு
6.கழுகு மலை கோயில், திருக்கழுகுன்றம்
7.ஆதிபராசக்தி கோயில், மேல்மருவத்தூர்
8.காளத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டாங்குளத்தூர்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்