News September 22, 2025
ஆபரேஷன் சிந்தூர் 2.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

மொரோக்கோ சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்தார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஆபரேஷன் சிந்தூர் பாகம் 2, 3 எல்லாம் பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்தே அமையும் எனத் தெரிவித்தார். மேலும், அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
Similar News
News September 22, 2025
கண்களை மூடினால் தோன்றும் நிறம் கருப்பு கிடையாதா?

கண்களை மூடினால் என்ன நிறம் தெரியும்? கருப்பு என்கிறீர்களா? இல்லை. கண்களை மூடும் போது இருட்டாக இருப்பதால் கருப்பு நிறம் தான் தோன்றுகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கண்களை மூடினால் தோன்றும் நிறம் eigengrau என அழைக்கப்படுகிறது. அதாவது, அடர்ந்த சாம்பல் நிறத்தை தான் ஜெர்மன் மொழியில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News September 22, 2025
டிகிரி போதும்.. ₹64,820 சம்பளத்தில் வேலை

SBI வங்கியில் காலியாகவுள்ள 122 மேனேஜர், டெபுடி மேனேஜர், மேனேஜர் (Credit Analyst) உள்ளிட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E., B.Tech., MBA. வயது வரம்பு: 25 – 35 (சில பதவிகள் மாறுதலுக்கு உட்பட்டது). சம்பளம்: ₹64,820 – ₹1,05,280. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.2. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 22, 2025
நடிகை ராதிகாவின் தாயார் காலமானார்… இறுதி அஞ்சலி

மறைந்த MR ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதாவின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கண்ணீர் மல்க தனது தாயாரை, சகோதரிகள் ராதிகா மற்றும் நிரோஷா உள்பட உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, CM ஸ்டாலின், கி.வீரமணி போன்ற அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கீதா ராதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.