News September 22, 2025
நீலகிரி: அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஆற்றில் மிதப்பு!

எமரால்டு மற்றும் அவலாஞ்சி அணைகள் சந்திக்கும் சுருக்கி பாலம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் மழையின் காரணமாக ஆற்றின் நீர் அளவு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்த எமரால்டு காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா, தற்கொலையா, என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 22, 2025
நீலகிரியில் மது அருந்த தடை தீர்மானம் நிறைவேற்றம்!

நீலகிரி மாவட்டத்தில் சுண்டட்டி கொட்டனல்லி மற்றும் சுற்றுலா பகுதிகளில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் சுப-துக்க நிகழ்ச்சிகளில் மது வழங்கக் கூடாது. மேலும் மது வழங்குவோர் சுப நிகழ்ச்சிகளுக்கு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க வழிவகுப்பு வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.
News September 22, 2025
நீலகிரி: கிராம வங்கி வேலை.. கடைசி வாய்ப்பு!

நீலகிரி மக்களே, இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்காக வரும் செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 22, 2025
நீலகிரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!