News September 22, 2025
குமரி: முதியவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாக ராஜன்(75). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று (செப்.21) மாலையில் அவரது மனைவி வீட்டிற்குள் இருந்தார். அப்போது வீட்டின் அருகில் நின்ற மரத்தில் தியாகராஜன் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் தியாகராஜனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
Similar News
News September 22, 2025
குமரி: சிப்காட் உணவு வளாகத்தில் வாடகைக்கு இடங்கள்

குமரி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் மெகா உணவு பூங்கா அமைக்கபட்டுள்ளது. இந்த உணவு பூங்காவில் தற்போது 13 ஏக்கர் அளவிலான இடங்கள் தொழில் முனைவோர்களுக்கு 94 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. தொழில் தொடங்க விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த தொழில் முனைவோர்கள் வடசேரி வேளாண்மை தொழில் விற்பனை துணை இயக்குனரை அணுக ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News September 22, 2025
குமரி: மழை நெருங்குது! – மக்களுக்கு அறிவுரை

குமரியில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News September 22, 2025
குமரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <