News September 22, 2025

BREAKING: வயது வரம்பை உயர்த்தியது தமிழக அரசு

image

கிராம உதவியாளர்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுப்பிரிவினருக்கு 32, BC, MBC, DNC பிரிவினருக்கு 39-ஆகவும், SC & ST மற்றும் கைம்பெண்களுக்கு 42-ஆகவும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. கிராம உதவியாளராக நியமனம் செய்யப்படும் ஒவ்வொரு விண்ணப்பதாரரிடமும் இந்த வயது வரம்பு நிலையை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News September 22, 2025

பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவரான கங்குலி!

image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இரண்டாவது முறையாக பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்வாகி இருக்கிறார். கங்குலி முன்பு 2015- 2019 வரை பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் 2022 வரை பிசிசிஐ தலைவராகப் பணியாற்றினார்.

News September 22, 2025

TN அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் தெலங்கானா CM

image

TN அரசு நடத்தும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலங்கான CM ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளார். நான் முதல்வன் திட்டம் உள்பட அரசின் 7 முக்கிய திட்டங்கள் தொடர்பாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்.25-ம் தேதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. முன்னதாக, ஆகஸ்டில் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் பஞ்சாப் CM பகவந்த் மான் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 22, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், செப்.25-ல் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், செப்.26, 27-ல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!