News September 22, 2025
தி.மலை: பூட்டிய வீட்டில் 65 பவுன் நகை கொள்ளை!

தி.மலை, பொன்னுார் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு (65) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவரது மனைவி நிர்மல்குமாரி. இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னையிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தனர். அப்பாவு, சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது பீரோவை உடைத்து 65 சவரன் நகை, திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து பொன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 22, 2025
தி.மலையில் தொழிலாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்

திருவண்ணாமலை ஐடிஐ வளாகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று (செப்டம்பர் 22) தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் வேதநாயகி, பயிற்சி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.
News September 22, 2025
தி.மலை பெண்களுக்கான பாதுகாப்பு எண்கள்!

வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியே. எனவே, பெண்கள் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம் -01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 ஆகிய எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News September 22, 2025
தி.மலை: பிறப்பு சான்றிதழ் இல்லையா? கவலை வேண்டாம்!

தி.மலை மக்களே! பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர, 2.அரசாங்க வேலையில் பணியமர, 3. பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்ளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ இனி எந்த கவலையும் வேண்டாம். உடனே இந்த <