News September 22, 2025
திண்டுக்கல்: நகை பறித்த தவெக பிரமுகர்கள்!

திண்டுக்கல்: கொடைக்கானலில் சாக்லெட் கடைக்காரரை சரமாரியாக தாக்கி 7 சவரன் நகை பறித்த தவெக பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து நடத்திய விசாரணையில் அந்தத் தாக்குதலில் ஈட்பட்டவர்க பழநி அருகே பெரிச்சிபாளையத்தைச் சேர்ந்த பழனிக்குமார், விக்னேஷ் ஆகியோர் என்பது தெரிந்ததும் அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 22, 2025
திண்டுக்கல்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 22, 2025
திண்டுக்கல் விவசாயிகள் மகிழ்ச்சி!

திண்டுக்கல்: வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டது. பயிர் வளர்ச்சிக்கான தேவையை கருத்தில் கொண்டு ஒரே பயிர் நிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
News September 22, 2025
திண்டுக்கல்: ரயிலில் கஞ்சா, குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: மதுரை சென்ற ஹைதராபாத், காச்சிக்குடா – மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கைக்கு கீழே வைத்திருந்த பையில் இருந்த 4 கிலோ கஞ்சா, 6 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர்.