News April 13, 2024
எதற்காக இந்த ஓரவஞ்சனை?

தமிழகத்தின் வரி பணத்தை, வட மாநிலங்களுக்கு மோடி தருவதாக அமைச்சர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார். பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்கள் ரூ.1 வரியாக செலுத்தினால் திருப்பி பல மடங்காக அவர்களுக்கு கொடுக்கும் மோடி, தமிழ்நாட்டுக்கு மட்டும் வெறும் 29 பைசா தருவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், பாஜகவின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழக மக்கள் தக்க பாடம் வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 13, 2025
உங்கள் மூளையை மெல்லக் கொல்லும் 6 பழக்கங்கள்

உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உறுப்பை சில மோசமான பழக்கவழக்கங்களால் நாம் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மறதி, Brain Fog, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உங்களது மூளையை கொல்லும் 6 மோசமான பழக்கங்கள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த தவறுகளை செய்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News November 13, 2025
அல்-ஃபலா பல்கலை.,க்கு தடை விதித்த AIU

ஹரியானாவின் அல்-ஃபலா பல்கலை.,யின் உறுப்பினர் நிலையை தற்காலிகமாக ரத்து செய்வதாக அனைந்திந்திய பல்கலை. கூட்டமைப்பு (AIU) அறிவித்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பின் பின்னணியில், அல்-ஃபலாவில் பணியாற்றிய டாக்டர்கள் உமர் உன் நபி, முசாமில் ஷகீல் இருவரும் உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பல்கலை., மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக AIU தெரிவித்துள்ளது.
News November 13, 2025
ஒரு ரூபாய் கூட கட்சியில் பெற்றதில்லை: அண்ணாமலை

நான் சுயமாக வணிகம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் எனது குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நான் தொழில் செய்யக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை என்றும் பேசியுள்ளார். மேலும், கோவா உள்ளிட்ட சில பகுதிகளுக்கு SIR பொறுப்பாளராக உள்ள நான், அங்கு செல்வதற்கான செலவையும் நானே செய்ய வேண்டும், கட்சியிலிருந்து ₹1 கூட பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.


