News April 13, 2024
சத்தமே இல்லாமல் சாதித்த ரிஷப் பந்த்

டெல்லி அணிக்காக 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் 9 ரன்களை கடந்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2,570 ரன்களை எடுத்து இப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். மேலும், ஸ்ரேயாஸ் 2,382, சேவாக் 2,375 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News November 14, 2025
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியுள்ளது. பிஹார் சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 67.13% வாக்குகள் பதிவாகியிருந்தன. குறிப்பாக, ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்குகள் செலுத்தியுள்ளனர். மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 2,616 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
News November 14, 2025
இன்று அனைத்து பள்ளிகளிலும்

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று (நவ.14) குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களே ரெடியா..!
News November 14, 2025
தவெக உடன் கூட்டணியா? குழு அமைத்த காங்கிரஸ்

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அடங்கிய குழு, இன்னும் 2 வாரங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது.


