News April 13, 2024

சத்தமே இல்லாமல் சாதித்த ரிஷப் பந்த்

image

டெல்லி அணிக்காக 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் 9 ரன்களை கடந்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2,570 ரன்களை எடுத்து இப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். மேலும், ஸ்ரேயாஸ் 2,382, சேவாக் 2,375 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Similar News

News August 17, 2025

ஆவணி ஞாயிற்றுக்கிழமையும்.. சூரிய வழிபாடும்!

image

ஆவணி ஞாயிற்றுக்கிழமையில், பூஜைக்காக அர்ச்சனை தட்டில் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும். சூரியன் உதிக்கும் திசை நோக்கி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, நீரை அர்ச்சனைத் தட்டின் மீது தெளிக்க வேண்டும். மாலை வரை தண்ணீர், பால், பழங்கள் ஆகியவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு விரதமிருக்க வேண்டும்.

News August 17, 2025

ED சோதனை வெறும் ஏமாற்று வேலை: சீமான்

image

ED நடவடிக்கை வெறும் ஏமாற்று வேலை என சீமான் விமர்சித்துள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமி வீடுகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் E.D சோதனை நடத்தியுள்ளது. இதுபற்றி பேசிய சீமான், ED சோதனையால் என்ன பயன், என கேள்வி எழுப்பிய அவர், ED எங்கெல்லாம் சோதனை நடத்துகிறதோ அங்கெல்லாம் அவர்கள் பணம் வாங்கியிருப்பதாகவும், அதற்கெல்லாம் ஆதாரம் வேண்டுமானால் தானே தருவதாகவும் தெரிவித்தார்.

News August 17, 2025

இன்று கனமழை எச்சரிக்கை

image

வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர் விடுமுறையையொட்டி, நீலகிரிக்கு மக்கள் படையெடுக்கும் நிலையில், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சில இடங்களில் 40 – 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!