News April 13, 2024
சத்தமே இல்லாமல் சாதித்த ரிஷப் பந்த்

டெல்லி அணிக்காக 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் 9 ரன்களை கடந்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2,570 ரன்களை எடுத்து இப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். மேலும், ஸ்ரேயாஸ் 2,382, சேவாக் 2,375 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News April 30, 2025
இவரால கூட இலவச கல்வி கொடுக்க முடியல!

மெட்டா CEO மார்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா ஆகியோரின் தொடக்கப்பள்ளி அடுத்த ஆண்டு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க, கலிஃபோர்னியாவில் கடந்த 2016-ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. இது மிகவும் கடினமான முடிவு எனவும், குழந்தைகளை மற்ற பள்ளிக்கு மாற்ற உதவி செய்வோம் எனவும் தம்பதி தெரிவித்துள்ளனர். இருப்பினும் மூடப்படுவதற்கான காரணத்தை அவர்கள் அறிவிக்கவில்லை.
News April 30, 2025
மே 29-ல் வரலாறு படைக்கும் இந்தியர்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வரும் மே 29-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் SpaceX Felcon ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளார். Axiom 4 என்ற தனியார் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.
News April 30, 2025
இந்தியாவில் வேகமெடுக்கும் ஐபோன் உற்பத்தி

ஒசூரில் புதிதாக அமைக்கப்பட்ட டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் பழைய ஐபோன் மாடல்களின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், பெங்களூருவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில், புதிய ஐபோன் 16 மாடல்களின் உற்பத்தி விரைவில் தொடங்கப்பட உள்ளன. சீன இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்த நிலையில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.