News September 22, 2025

மரக்காணத்தில் UPSC ஊக்குவிப்புப் பயிற்சி முகாம்

image

இந்திய ஆட்சிப் பணி (UPSC) தேர்வர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சி முகாம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட விழிப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர் குமரவேல் ஒருங்கிணைத்த இந்தப் பயிற்சி முகாமை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தொடங்கி வைத்துப் பேசினார். துணை கண்காணிப்பாளர் உமாதேவி, ஆய்வாளர் பரணிநாதன், பயிற்சியாளர் அழகு முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News

News November 15, 2025

விழுப்புரம்: சம்பளம் வரலையா..? உடனே CALL!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 15, 2025

விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்…!

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நவ.26 ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் தங்களது மனுக்களை இரட்டைப் பிரதிகளில் உரிய இணைப்புகளுடன் இக்கூட்டத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

விழுப்புரம்: வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை!

image

விழுப்புரம்: வண்டிமேட்டைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவரது மனைவி அபிதா பேகம். இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருந்தது. பீரோவை உடைத்து அதிலிருந்த ஐந்தே கால் சவரன் நகைகள், ஒரு வெள்ளி மோதிரம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!