News September 22, 2025

மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: கார்கே

image

PM மோடியின் <<17784663>>பேச்சை<<>> காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கொண்டுவந்த எளிமையாக ஜிஎஸ்டியை விட்டுவிட்டு மோசமாக வரியை பாஜக அரசு கொண்டு வந்ததாக சாடிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் ₹55 லட்சம் கோடியை வசூலித்துவிட்டு ₹2.5 லட்சம் கோடி மக்கள் சேமிக்கலாம் என பிரதமர் கூறுவதாகவும், பெரிய காயத்துக்கு சிறிய பேண்ட்-எய்ட் போட்டுள்ள மோடி அரசு, இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் கார்கே கோரியுள்ளார்.

Similar News

News September 22, 2025

பெண்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர்: அன்புமணி

image

போதைப் பொருள் புழக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். விவசாயிகள், மக்களை காப்பாற்ற முடியாத நிலையில் திமுக இருப்பதாகவும், பெண்கள் இப்போதைய ஆட்சி மீது கோபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 505-ல், 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் ஆறு, குளம், கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை எனவும் சாடியுள்ளார்.

News September 22, 2025

குழந்தை பெற்றுக் கொண்டால் ₹3 லட்சம் பரிசுத்தொகை

image

குழந்தையை பெற்றுக்கொண்டால் கூடுதல் சுமை என யோசிக்கும் பலர் உலகில் இருக்கதான் செய்கிறார்கள். ஆனால், தைவான் மக்கள் அப்படி யோசிக்க மாட்டார்கள். ஏனென்றால் அங்கு ஒரு குழந்தை பெற்றால் ₹3 லட்சம், இரட்டை குழந்தை பிறந்தால் ₹6 லட்சமும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தைவான் மக்கள் தொகையை அதிகரிக்க இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

News September 22, 2025

குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு ஏன் கொடுக்க கூடாது?

image

குழந்தைகளுக்கு முதல் ஒரு வயதில் சர்க்கரை, உப்பு கொடுத்ததால் அவர்களுக்கு அது பெரும் பாதிப்பை உடலில் ஏற்படுமாம். குழந்தைகளுக்கு சிறுநீரகங்கள் முதல் 12 மாதங்களில் முழுமையான வளர்ச்சியை அடையாது என்பதால், உப்பு(சோடியம்) பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், சர்க்கரை கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வை கொடுக்கும். இதனால் சத்தான உணவுகளை உட்கொள்ள மாட்டார்கள். தாய்மார்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!