News September 21, 2025
தவறவிட்ட பொருட்களுக்கு அலுவலகம் திறப்பு

மெட்ரோ ரயிலில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா தலைமை வகித்தார்.தவறவிட்ட பொருட்கள் தொடர்புக்கு https://chennaimetrorail.org/lost-and-found-enquiry
Similar News
News September 22, 2025
கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஏசி ட்ரீ

சென்னையின் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் 105 அடி உயரத்தில் “ஏசி ட்ரீ” எனப்படும் சூப்பர் ட்ரீ கோபுரம் அமைக்கப்படுகிறது. சிங்கப்பூரின் சூப்பர் ட்ரீ மாதிரியில் உருவாக்கப்படும் இந்த கோபுரம் 10 தளங்களுடன்,கண்ணாடி சூழலமைப்பில் உள்ளக மற்றும் வெளிப்புற பார்வை மேடைகளைக் கொண்டுள்ளது. சுமார் 100 பேர் ஒரே நேரத்தில் நகரத்தைப் பார்வையிட வசதி உள்ளது.
News September 22, 2025
சென்னையில் நபிகள் நாயகத்தின் 1500-வது பிறந்தநாள் விழா

நபிகள் நாயகத்தின் 1500-வது பிறந்தநாள் விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (செப்.21) நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, எஸ்.எம்.நாசர் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
News September 21, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.