News September 21, 2025

கரூரில் 6பேர் போலீசாரால் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அண்ணாநகர் சீத்தக்காடு பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, சின்னதாராபுரம் போலீசார் ஜெகன் 31, ரஞ்சித்குமார் 29, கார்த்திகேயன் 42, சந்தானம் 40, ஆறுமுகம் 42, அரவிந்த் கார்த்திக் 23 ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூ.1230 பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 15, 2025

கரூரில் பெண் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூரை சேர்ந்தவர் முரளி மனைவி சுதா 26. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அருகில் குடியிருக்கும் கோமதி, மகாலட்சுமி, முருகானந்தம், அம்சவல்லி ஆகிய 4 பேரும் எச்சில் துப்பி தகாத வார்த்தையால் திட்டி கையால் அடித்ததாக சுதா அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசரணை

News November 15, 2025

கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

கரூர் மாவட்டம், இன்று (15.11.2025 ) அரவக்குறிச்சி தொகுதி, புன்னம் சத்திரம், அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாமநடைபெறுகிறது. இதில் நரம்பு, இதயம், கை, கால் போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News November 14, 2025

மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

கரூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது மேலும் (http://q.me-qr.com/mk9ORAPC) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும். மேலும் 20.11.2025 அன்று நாரத கான சபா, திருமண மண்டபத்தில் உழவர் சந்தை அருகில், நடை பெற இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல் அளித்துள்ளார்.

error: Content is protected !!