News September 21, 2025
தென்காசி: 12th தகுதி., 7267 அரசு காலியிடங்கள்! உடனே APPLY

தென்காசி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. கடைசி தேதி – செப். 23 ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News September 21, 2025
தென்காசி: குற்றால அருவியில் கரடி நடமாட்டம்

தென்காசி மாவட்டம், குற்றால அருவி பகுதியில் கரடி ஒன்று சுற்றித்திரிவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கபட்டுள்ளது என வனக்கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News September 21, 2025
தென்காசி: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

தென்காசி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.
News September 21, 2025
தென்காசி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் மாற்றம்

தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர், செங்கோட்டை, புளியரை, சிவகிரி, சுரண்டை, சேர்ந்தமரம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர்கள் 17 பேர்கள் பணியிடை மாற்றம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.