News September 21, 2025
இன்று இரவு கணவன் மனைவி சேரக் கூடாதாம்

சூரிய கிரகணம் இன்று இரவு 10.59 முதல் நாளை அதிகாலை 3.23 வரை நிகழவுள்ளது. கிரகணம் நிகழும் பொழுது, கணவன்- மனைவி இணைய கூடாது என்று சொல்லப்படுகிறது. அதேபோல், மற்றவர்களை விடவும் கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெளிவரும் அதிகப்படியான கதிர்வீச்சு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமாம்.
Similar News
News September 21, 2025
இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறியுள்ளது. மேலும், காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
News September 21, 2025
ஆயுதபூஜை விடுமுறை.. நாளை முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே நாளை(செப்.22), 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE IT.
News September 21, 2025
கல்வியில் அரசியலை திணிக்க வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

தமிழக அரசு, தனது அரசியல் நிலைப்பட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக்கூடாது என்று தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். தமிழக பள்ளிகளில் ஏற்கெனவே தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன; வேறு மொழிகளை திணிக்கவில்லை என்றும், RTE விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.