News September 21, 2025

திருப்பூர்: +2 போது ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் பணிக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.23ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHAREit

Similar News

News September 21, 2025

திருப்பூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

image

திருப்பூர், மங்கலம் ஊராட்சி ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரியாஜ்தீன் (24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன வேதனையில் இருந்தவர் நேற்று முன்தினம் இவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரியாஜ்தீன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 21, 2025

திருப்பூர்: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி போதும்.. SUPER வாய்ப்பு!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் மின் விநியோகம் செய்யும் நிறுவனமான பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம் தொழிற்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,149 இடங்கள் உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.13,500 – ரூ.17,500 வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 21, 2025

திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருப்பூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!