News September 21, 2025
2027-ல் நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை

மும்பை – அகமதாபாத் இடையே 2027 டிசம்பரில் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் வருகையின் மூலம், 9 மணி நேரமாக இருக்கும் பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் எனவும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் புறப்படும் வகையில் சேவைகள் வடிவமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதற்கு முன்பதிவு செய்ய வெண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
ஒரு ரூபாய் கூட இல்லாமல் உருவானது நாதக: சீமான்

மதம், சாதி, அரசியல், திரை கவர்ச்சி என்ற எந்த பின்புலமும் தனக்கு இல்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். ஒரு ரூபாய் கூட இல்லாமல், யாரிடமும் ஆதரவு கோராமல், மக்கள் சக்தியாக உருவெடுத்தது நாம் தமிழர் கட்சி என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு போராளிக்கு குடும்ப உறவை விட கொள்கை உறவே மேலானது என்பதை முன்னிறுத்தி, நாம் தமிழர் கட்சி மூன்றாவது அரசியல் சக்தியாக திகழ்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
RECIPE: சத்தான குதிரைவாலி லட்டு!

ஜங்க் ஃபுட்ஸுக்கு பதிலாக, சிறுவர்களுக்கு சத்தான குதிரைவாலி லட்டு செய்து கொடுங்கள். அதை செய்ய, முதலில் குதிரைவாலி அரிசி & அவலை கடாயில் போட்டு, மிதமான தீயில் வறுக்கவும் *இவற்றுடன் நெய் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் *இத்துடன் பொடித்த வெல்லம் & ஏலக்காய் தூள், பாதாம், முந்திரி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் *கைகளில் நெய் தடவி, இந்த கலவையை சிறு, சிறு லட்டுகளாக உருட்டவும். SHARE.
News September 21, 2025
ஒரு மாதம் பணிபுரிந்தாலும் பென்ஷன் பெறலாம்

EPF பென்ஷன் பெறுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சில ஊழியர்களுக்கு EPFO விதிவிலக்கு அளிக்கிறது. இதன்படி, BPO, லாஜிஸ்டிக்ஸ் (அ) ஒப்பந்த முறையில் தற்காலிக வேலை செய்பவர்கள் ஒரு மாதம் பணிபுரிந்தாலே EPF பென்ஷன் பலன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற வேலைகளில் பணிபுரிவோருக்கு EPF அக்கவுண்ட் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.