News September 21, 2025
2034 வரை மோடி தான் PM வேட்பாளர்: ராஜ்நாத் சிங்

2034 வரை மோடி தான் பாஜகவின் PM வேட்பாளர் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1980 முதல் மோடியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அவரைப் போன்ற மக்களிடம் நெருக்கமாக தொடர்பில் இருக்கும், பிரச்னைகளை எளிமையாக அணுகும் ஒரு தலைவனை இதுவரை பார்த்ததில்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், சர்வதேச பிரச்னைகளுக்கு உலக நாடுகளின் தலைவர்களே PM மோடியுடன் ஆலோசனை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
மீண்டும் பொதுக்குழுவை கூட்டவுள்ளாரா ராமதாஸ்?

கடந்த மாதம் நடந்த பாமக பொதுக்குழுவில் அன்புமணியை நீக்கினார் ராமதாஸ். ஆனால் அதற்கு உறுப்பினர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்படவில்லையாம். எனவே, மீண்டும் பொதுக்குழுவை கூட்டி, கட்சியிலிருந்து அன்புமணியை நீக்கியதற்கு ஒப்புதல் பெறும் தீர்மானத்தை நிறைவேற்ற ராமதாஸ் முடிவு செய்துள்ளார் என அவருடைய தரப்பினர் கூறிகின்றனர். இந்த பொதுக்குழு அக்டோபர் முதல் வாரத்தில் நடக்கலாம் என கூறப்படுகிறது.
News September 21, 2025
விலை குறைந்தது…

IRCTC சார்பில் ரயில்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் வாட்டர் பாட்டில் விற்கப்படுகிறது. GST வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதை அடுத்து, ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ₹15லிருந்து ₹14-ஆகவும், அரை லிட்டர் பாட்டில் ₹10லிருந்து ₹9-ஆகவும் IRCTC குறைத்துள்ளது. எனவே, இனி ரயில்களில் பயணிப்போர் கூடுதல் விலை கொடுத்து வாட்டர் பாட்டிலை வாங்க வேண்டாம்; ஒரு லிட்டர் வாட்டருக்கு ₹14 கொடுத்தாலே போதும்.
News September 21, 2025
சூர்யகுமார் யாதவ் செய்ததில் தவறில்லை: கங்குலி

ஆசிய கோப்பையில், IND vs PAK போட்டியின்போது, பாக்., வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது சர்ச்சையானது. இந்நிலையில், பாக்., கேப்டனுடனோ (அ) வீரர்களுடனோ கைகுலுக்காமல் செல்வது சூர்யகுமார் யாதவின் தனிப்பட்ட விருப்பம் என்று கங்குலி தெரிவித்துள்ளார். இதில் தவறொன்றுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, இந்த விவகாரத்தை ICC-யிடமும் பாக்., கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ளது.