News September 20, 2025
இயற்கையோடு வாழ்ந்தவர் இயற்கை எய்தினார்

‘தாவரங்களின் என்சைக்ளோபீடியா’ என்று போற்றப்படும் நாட்டின் தலைசிறந்த தாவரவியல் விஞ்ஞானி Dr.ஹேமா சானே (85) காலமானார். புனே கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிய இவர் ஓய்வுக்கு பின்பும் ஆய்வை தொடர்ந்தார். இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக சாகும்வரை மின்சாரத்தை பயன்படுத்தாத இவர், தன் சொத்துகளை தான் வளர்த்த நாய், பூனைகள், கீரிப்பிள்ளை மற்றும் பறவைகளுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
Similar News
News September 21, 2025
H1B விசா கட்டண உயர்வு: இவர்களுக்கு மட்டும் விலக்கு

<<17776459>>H1B விசா<<>> கட்டணத்தை அமெரிக்கா பல மடங்கு உயர்த்திய நிலையில், சிலருக்கு விலக்கும் அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே H1B விசா வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதேபோல், 12 அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களாக பிற நாடுகளில் இருப்பவர்கள், இன்றுக்குள் அமெரிக்கா வராவிட்டால் பணம் செலுத்த வேண்டும். மேலும், அமெரிக்க உள்துறை, ராணுவம், பொறியியல், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
News September 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 21, 2025
பரப்புரையில் தவறான தகவலை சொன்ன விஜய்

அலையாத்தி காடுகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நாகையில் கடல்சார் கல்லூரி எதுவும் இல்லை என்றும் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டினார். இதனை தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. 2021-ல் 45 சதுர கி.மீ பரப்பளவாக இருந்த அலையாத்தி காடுகள் தற்போது 90 சதுர கி.மீ. என பெருகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நாகையில் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.