News September 20, 2025

அரியலூரில் காவல் வாகன மாதாந்திர ஆய்வு

image

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி I.P.S. இன்று காவல் துறையின் பயன்பாட்டில் உள்ள காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ரகுபதி , காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 21, 2025

அரியலூர்: திமுக பொதுக்கூட்டம் நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் (செப்டம்பர் 21) அரியலூர் அண்ணா சிலை அருகில் மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அது சமயம் அரியலூர் மாவட்ட திமுக சார்பில் அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

News September 20, 2025

அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

அரியலூர் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவும் உள்ளம் கொண்ட நாகை மக்களே இதனை LIKE& SHARE பண்ணுங்க.

News September 20, 2025

ஆட்சியர் தலைமையில் விழிப்புணா்வு பேரணி

image

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி மற்றும் உணவுப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர். சத்துணவு அமைப்பாளர்கள் தயாரித்த உணவுப் பொருட்கள் கண்காட்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!