News April 12, 2024
அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் 5ஆம் தேதி கணக்கீட்டின்படி, அந்நியச் செலாவணி 2.98 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 648.562 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தங்கம் இருப்பை பொருத்தமட்டில், 2.39 பில்லியன் டாலர் உயர்ந்து 54.55 பில்லியன் டாலராக உள்ளது. Special Drawing Rights 18.17 மில்லியன் டாலரில் இருந்து 24 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
Similar News
News January 14, 2026
பொங்கல் பணம்.. இன்றே கடைசி நாள்

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேஷ்டி, சேலை, ₹3,000 ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நாளை முதல் பொங்கல் விடுமுறை தொடங்கவுள்ளதால், இன்றே பொங்கல் பரிசை பெற கடைசி நாளாகும். எனவே, பொங்கல் பரிசு வாங்காதவர்கள் உடனே ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. பொங்கலுக்கு பிறகும் தொகுப்பு வழங்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
News January 14, 2026
வா வாத்தியார்- எம்ஜிஆரா? நம்பியாரா? Review & Rating

✦தாத்தா ராஜ்கிரணால் எம்ஜிஆராக வளர்க்கப்படும் கார்த்தி, நம்பியாராக மாறி, மீண்டும் எப்படி எம்ஜிஆராகிறார் என்பதே ‘வா வாத்தியார்’ ✦பிளஸ்: கார்த்தி ஒன் மேன் ஷோ இந்த படம். பட்டையை கிளப்பியுள்ளார். ராஜ்கிரண் உள்பட மற்ற நடிகர்கள் கச்சிதம். இயக்குநர் நலனின் ஒன்லைன் காமெடியும், திரைக்கதையும் ரசிக்க வைக்கிறது. கேமரா, இசை அற்புதம் ✦பல்ப்ஸ்: 2-ம் பாதியின் சில இடங்களில் சுவாரஸ்யம் குறைகிறது. Rating: 2.5/5.
News January 14, 2026
சற்றுமுன்: 38 பேர் பலி.. பெரும் துயரம்

ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாலியில் உள்ள நைஜர் நதி நகரத்தில் இருந்து, இரவு நெல் அறுவடை செய்த தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஏற்றிக் கொண்டு சென்ற படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை பார்த்து, உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.


