News September 20, 2025
தமிழகத்தில் புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

செப்.25-ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதற்கிடையே, இன்று 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள். உங்க ஊரில் மழை பெஞ்சா லைக் பண்ணுங்க.
Similar News
News September 20, 2025
லீவுக்கு முந்தைய நாள் இரவுக்கு இப்படி ஒரு பவரா?

‘ஹைய்யா.. நாளைக்கு லீவு’ என்பது, பள்ளிக் காலம் தொட்டே நம்முடன் கலந்துள்ள உணர்வு. என்னதான் விடுமுறை நாள் நமக்கு இன்பத்தை கொடுத்தாலும், அதற்கு முந்தைய நாளின் மாலைப்பொழுது கொடுக்கும் நிம்மதியை எந்த நாளும் கொடுத்திட முடியாது. ‘நாளை ஒருநாள் லீவ் இருக்கிறது’ என்ற நினைப்புடனே, முந்தைய நாளை ரசித்து அனுபவித்து வருபவர்கள் பலர். நீங்கள் லீவுக்கு முந்தைய நாளை எப்படி கழிப்பீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க
News September 20, 2025
TRB ராஜாவை மறைமுகமாக சாடிய விஜய்

திருவாரூர் பரப்புரையில் அமைச்சர் TRB ராஜாவை விஜய் மறைமுகமாக சாடினார். இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவரோட வேலை என்ன தெரியுமா? CM குடும்பத்திற்கு சேவை செய்யுறது மட்டும் தான் அவருடைய வேலை. அந்த அமைச்சருக்கு மக்கள் தான் முக்கியம்னு புரிய வைக்க வேண்டும் என விஜய் கூறினார். மேலும், திருவாரூரில் பஸ் ஸ்டாண்டை NH உடன் இணைக்க சரியான ரோடு வசதி கிடையாது என்று குற்றஞ்சாட்டினார்.
News September 20, 2025
ரொமான்ஸ் செய்வதில் சிறந்த ராசிக்காரர்கள்

ரொமான்ஸ் வாழ்வின் முக்கியமான அங்கம். ஆனால் ஒவ்வொருவரின் ராசிக்கேற்ப அவர்கள் ரொமான்ஸ் செய்யும் விதம் மாறுபடுகிறது. குறிப்பாக மேஷ ராசியினர் துணையுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறார்கள். கடகம் புதுப்புது முயற்சிகள் செய்கிறார்கள், சிம்மம் விசுவாசமாக இருக்கிறார்கள். துலாமும், மீனமும் உணர்ச்சி மிக்கவர்கள். மற்ற ராசிக்காரர்கள் ரொமான்சில் அதிக கூச்சம் கொண்டவர்கள். நீங்கள் என்ன ராசி?