News April 12, 2024
கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ந.சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News August 27, 2025
பெரம்பலூர்: 256 இடங்களில் சிலை வைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 256 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். பெரம்பலூர் 56, ஊரகப்பகுதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 52ம், பாடலூர் காவல் நிலையத்தில் 28ம், மருவத்தூர் 13, அரும்பாவூர் 35, குன்னம் பகுதியில் 25, மங்கல மேடு 34, வி.களத்தூர் 16 என மொத்தம் 256 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளனர்.
News August 27, 2025
பெரம்பலூர்: மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன்

பெரம்பலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
அரும்பாவூர்: சிறுமியை கடித்த தெரு நாய்கள்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் கிராமத்தில் தனது தாயுடன் பள்ளிக்கு சென்ற ஹாலிசா என்ற சிறுமியை அங்கிருந்த தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிதத்தில் ஹாலிசா பலத்த காயம் அடைந்து கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் பெருமளவு நடைபெறுவதால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.