News September 20, 2025
கடலூர்: ரூ.75,000 கையாடல்; இன்ஸ்பெக்டர் மாற்றம்

ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா கடந்த 8-9-2025 அன்று மூதாட்டி ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபாகரன் (39) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தார். இந்நிலையில் பிரபாகரனிடம் பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரத்தை இன்ஸ்பெக்டர் பிருந்தா கணக்கு காட்டாமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த விழுப்புரம் சரக டிஐஜி உமா, இன்ஸ்பெக்டர் பிருந்தாவை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.
Similar News
News November 8, 2025
கடலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

கடலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 8, 2025
கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில், உணவுப் பொருட்களை பார்சல் செய்ய தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திய 9 உணவகங்களுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் வணிகர்கள் மற்றும் உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.
News November 8, 2025
கடலூர்: 8.5 சவரன் நகை மாயம்

புதுச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர்(57) என்பவர், தனது மனைவி மகாலட்சுமியுடன் சிதம்பரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அரசு பேருந்து புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் வந்தார். பின் சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் இருந்து ஆட்டோவில் சென்றார்.அப்போது பையில் வைத்திருந்த 8 1/2 பவுன் நகை காணவில்லை. என தெரியவந்தது. பின் இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


