News September 20, 2025

திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 20, 2025

கோயில் சொத்துக்கள் கோயில்களுக்கே சொந்தம்!

image

இந்து ஆலயங்களின் வருமானம் இந்துக்களின் நலனுக்கே என்ற தலைப்பில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நேற்று பழநியில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: “கோயில்களின் சொத்துக்கள் கோயில்களுக்கே சொந்தமானவை. வருமானம் இந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். கோயில்களை இந்துக்கள் நிர்வகிக்க குழுக்கள் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்காக அரசியல் சாயம் இல்லாத சுயாதீன அமைப்பு தேவை” என்றார்.

News September 20, 2025

திண்டுக்கல் அருகே இரவில் பரபரப்பு சம்பவம்!

image

திண்டுக்கல், வேடசந்தூர் நல்லமனார்கோட்டையில், இரவு நேரத்தில் இருவர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். அப்போது, செல்லம்மாள் என்ற மூதாட்டி தடுக்க முயன்றபோது, மர்ம நபர்கள் கட்டையால் தலையில் அடித்துள்ளனர். பின்னர் கொள்ளையர்கள் வேறு வீட்டிற்கு சென்று, ரூ.9,000 திருட முற்பட்டபோது, வீட்டில் இருந்த வெள்ளையம்மாள் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, இரு கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பி ஒட்டியுள்ளனர்.

News September 20, 2025

திண்டுக்கல்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!