News September 20, 2025

குமரி: சிறுத்தை தாக்கி உயிர் பிழைத்த தொழிலாளி

image

ஆம்பாடி அருகே நேற்று மதியம் தனியார் ரப்பர் தோட்டத்தில் செங்குழிக்கரை அல்போன்ஸ்(58) என்ற தொழிலாளி ரப்பர் மரத்தில் இருந்து பால் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாறையில் மறைந்திருந்த சிறுத்தை அவர் மீது பாய்ந்ததும் அவர் அலறவே, சத்தம் கேட்டு பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வர சிறுத்தை தப்பி ஓடிய நிலையில் அதிர்ஷடவசமாக அவர் உயிர்தப்பினார். சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

Similar News

News September 20, 2025

குமரி: 10th தகுதி.. ஏர்போர்ட்டில் வேலை ரெடி! உடனே APPLY

image

குமரி மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> நாளை (செப். 21)க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு மதுரையில் நடைபெறும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 20, 2025

குமரி: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! நாளை கடைசி

image

குமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 21க்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 20, 2025

குமரி: சிறுமி பாலியல் வன்கொடுமை – வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

image

கடந்த 2016ம் ஆண்டு ராஜாக்கமங்கலம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கீழ சங்கரன் குழி பகுதியை சேர்ந்த சந்தனக்குமார் (43) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சிறப்பாக நடத்திய அதிகாரிகளை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!