News September 20, 2025

நெல்லை சந்திப்பில் வாலிபர் மர்ம மரணம்

image

நெல்லை சந்திப்பு ரயில்வே நிலையம் செல்லும் பாதையில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 20, 2025

நெல்லை: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! நாளை கடைசி

image

நெல்லை மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 21க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 20, 2025

நெல்லை: 10th தகுதி.. ஏர்போர்ட்டில் வேலை ரெடி! உடனே APPLY

image

நெல்லை மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> நாளை (செப். 21)க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு மதுரையில் நடைபெறும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 20, 2025

நெல்லை: ஆட்டோவை திருடி சென்ற நபர் சுற்றி வளைப்பு

image

வண்ணாரப்பேட்டை பரணி நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் நேற்றிரவு நெல்லை டவுன் ஸ்ரீ புரத்தில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று உள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது தனது ஆட்டோவை ஒருவர் எடுத்து செல்வதை பார்த்துள்ளார். உடனடியாக தனது நண்பர்களுக்கு தகவல் கூறியுள்ளார். வண்ணார்பேட்டையில் வைத்து அவரது நண்பர்கள் ஆட்டோவை மடக்கி பிடித்து ஆட்டோவை திருடி சென்ற நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!