News September 20, 2025
கொலை வழக்கு: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா என்பவரை முன்பகை காரணமாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கொலை செய்த வழக்கில், விக்கிரவாண்டி தாலுக்கா கலித்திராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி என்கிற பாரதிதாசனை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 20, 2025
விழுப்புரம்: PF எண்னை மறந்தால் என்ன செய்வது?

விழுப்புரம் மக்களே! EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம். ஷேர் பண்ணுங்க!
News September 20, 2025
விழுப்புரம்: டிகிரியும் தமிழும் போதும்! வங்கியில் வேலை

IBPS பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 13,217 காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 688 ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியும் கணினி திறனும் பெற்று இருக்க வேண்டும். ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுடையவர்கள் இந்த<
News September 20, 2025
விழுப்புரம்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க