News September 20, 2025

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

image

காலையில் வீட்டை சுத்தம் செய்து, சொம்பு ஒன்றில் நாமமிட்டு துளசி மாலையை சுற்றி, அதில் சிறிது நேரம் அரிசியை போட்டு, பெருமாள் படத்தின் முன் வைக்கவும். இந்த அரிசியில்தான், பூஜைக்கும் பயன்படுத்த வேண்டும். நைவேத்தியமாக புளி சாதம், சர்க்கரை பொங்கல், வடை படைக்கலாம். துளசி தீர்த்தம் & மாவிளக்கு கட்டாயம். பூஜை செய்யும் போது, வீட்டில் அனைவரும் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். SHARE IT.

Similar News

News September 20, 2025

ஏன் தான் டாக்டர்கள் கிறுக்குறாங்களோ!

image

இந்த சந்தேகம் அனைவருக்குமே வந்திருக்கும். Prescription-ஐ பார்த்தால், என்ன எழுதி இருக்கிறார் என்றே புரியாது. இதனால், பல ஆபத்துகளும் ஏற்படலாம். *மருந்துகடையில் கடைக்காரர் மாத்திரையை மாற்றி கொடுக்கலாம் *மாத்திரையின் Dosage மாறலாம், எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற குழப்பமும் ஏற்படலாம். எனவே, டாக்டர்கள் புரியும்படி, எழுதி கொடுப்பதே சாலச்சிறந்தது. இதனை விளையாட்டாக கருதாமல், அனைவருக்கும் பகிரவும்.

News September 20, 2025

நாகையில் விஜய்.. பூம்புகாரை கையிலெடுத்த ஸ்டாலின்

image

கீழடிக்கு அடுத்ததாக, பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நாகை, திருவாரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், அதன் அருகில் உள்ள பூம்புகார் குறித்து CM கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே, கடந்த வார பரப்புரைக்கிடையே, கொள்கையில்லா கூட்டத்தை சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என தெரிவித்திருந்தார்.

News September 20, 2025

காயங்கள், வலிகளை மறக்கவில்லை: சாம் பிட்ரோடா

image

பாக்., உள்பட அண்டை நாடுகளில் இருக்கையில் இந்தியாவில் உள்ளது போல உணர்கிறேன் என்று காங்கிரஸை சேர்ந்த சாம் பிட்ரோடா கூறியதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிட்ரோடா, நம் அண்டை நாடுகளுக்கும் நமக்கும் உள்ள பொதுவான வரலாறு, சமூக, கலாசார ஒற்றுமைகளின் அடிப்படையில் அப்படி கூறியதாகவும், அந்நாடுகளால் ஏற்பட்ட காயங்கள், வலிகளை மறக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!