News September 20, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 3,538 மனுக்கள்

திருச்சியில் இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. அதில் 3538 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. திருத்தாந்தோணி சாலையில் 1085 மனுக்களும், மேலசிந்தாமணியில் 891, கல்லக்குடியில் 361, அதவத்தூரில் 248, லால்குடியில் 480, தா.பேட்டையில் 93, துறையூரில் 522, புள்ளம்பாடியில் 699 மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
திருச்சி: வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு!

வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பும் நபர்கள், இந்திய அரசின் eMigrate (emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24 மணி நேர கட்டணமில்லா உதவி மையத்தினை (1800 309 3793) தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
அரசு பேருந்தை மறித்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் கைது

துவரங்குறிசி அருகே கருமலை அடுத்த சின்னமணியங்குறிச்சி புளியந்தோப்பு அருகில் நேற்று மாலை டூவீலரில் சென்ற போதை ஆசாமிகள் அவ்வழியே சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தையால் திட்டி பிரச்சனை செய்துள்ளனர். இதுகுறித்து ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து எண்டபுளியைச் சேர்ந்த சிவா, சந்திரசேகரை இன்று புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர்.
News September 19, 2025
திருச்சி மக்களே இனி அலைச்சல் வேண்டாம்

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பள்ளி முதல் ஆதார், பாஸ்போர்ட் பெறுவதற்கு மிக முக்கியமானதாகும். பிறப்பு சான்றிதழ் பெற இனி அலைச்சல் வேண்டாம். புதிய சான்றிதழ் பெறுவதற்கும், தொலைந்த சான்றிதழ் பெறுவதற்கும்<