News September 20, 2025
கரூர்: கல்வி உதவித் தொகை வேண்டுமா?

கரூர் மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.www.bcmbcw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் 31.10.2025 தேதிக்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டிடம் முதல் தளம் சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற விலாசத்தில் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
Similar News
News September 20, 2025
கரூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், 22.09.2025 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு, எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 20, 2025
கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.09.2025 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News September 19, 2025
கரூர்: விபத்து நடந்த உடனே CALL!

கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின் பெயரில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக வாகனத்தில் அதிவேகமாக சென்றால் உயிரை இலக்க நேரிடும் என்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இன்று வெளியிட்டனர். மேலும் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்து நடந்தாலும் உடனடியாக 9498100780 (100) அல்லது (108) இந்த எண்ணிற்கு அழைக்கும் என அறிவிப்பு செய்துள்ளனர்.