News September 19, 2025
மாவட்ட காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம்,உடுமலை, அவினாசி,பல்லடம், தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்
Similar News
News September 20, 2025
உடுமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆறுதல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மகளிர் பள்ளியைச் சேர்ந்த புவனேஸ்வரி இன்று வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் இந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக மாணவி உடல் வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் இன்று புவனேஸ்வரியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
News September 19, 2025
திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்
News September 19, 2025
திருப்பூர் மக்களே இனி எளிதாகிறது!

பொதுமக்களின் பயண வசதிக்காக ரயில்வே துறையுடன் இணைந்து ரயில் பயணிகள் முன்பதிவு சேவை இந்திய அஞ்சல் துறை மூலம் திருப்பூர் காந்தி நகரில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, தக்கல் முன்பதிவு சேவைகள் எளிதாக வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் பகுதி பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.