News September 19, 2025
ராணிப்பேட்டைஇரவு ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்கள், கிராமப்புறங்களில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாகன ரோந்து மற்றும் கால்நடை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News September 20, 2025
இராணிப்பேட்டையில் மாதிரி தேர்வு

இராணிப்பேட்டை மாவட்ட ராணிப்பேட்டையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (செப்.20) காலை 10 மணிக்கு குரூப்-2 & 2ஏ தேர்விற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, ஆதார் அட்டை நகல், HALL TICKET உடன் நாளை காலை 09.30 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வர வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
News September 19, 2025
கலவை முகாமில் நலத்திட்ட உதவிகள்

கலவை ANS மஹாலில் இன்று (செப். 19, 2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இத்திட்டத்தால் பயனடைந்த 32 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் அரசு அதிகாரிகள் இதில் உடனிருந்தனர்.
News September 19, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100