News September 19, 2025
உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் திமுக: அன்புமணி

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமல் திமுக அரசு துரோகம் செய்வதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் ஏக்கருக்கு அறிவித்த ₹6,800 இழப்பீடு தொகை போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது ஏக்கருக்கு ₹30,000 வழங்க அரசு தவறினால் போராட்டம் நடத்துவேன் என்று அன்புமணி எச்சரித்துள்ளார்.
Similar News
News September 20, 2025
ராசி பலன்கள் (20.09.2025)

➤மேஷம் – துணிவு ➤ரிஷபம் – பக்தி ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – நலம் ➤சிம்மம் – தனம் ➤கன்னி – இன்பம் ➤துலாம் – போட்டி ➤விருச்சிகம் – பெருமை ➤தனுசு – செலவு ➤மகரம் – உறுதி ➤கும்பம் – சுகம் ➤மீனம் – ஆக்கம்.
News September 19, 2025
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய 140 புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் ஷரியா சட்டங்கள் மற்றும் தங்களது கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாலினம் மற்றும் வளர்ச்சி, தகவல் தொடர்பில் பெண்களின் பங்களிப்பு, பெண்களின் சமூகவியல் உள்ளிட்ட பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
News September 19, 2025
சாராய பணத்தில் திமுகவின் விழா: அண்ணாமலை

சாராயம் விற்ற பணத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்பட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கரூரில் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் யாருக்கு திருடர், ஊழல்வாதி பட்டம் கொடுத்தாரோ (செந்தில் பாலாஜி) அவரை வைத்தே இன்று முப்பெரும் விழா நடத்தியிருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழகத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் எடுபிடி வேலை செய்வதாக சாடினார்.