News September 19, 2025
திருப்பூர்: தீரா நோயால் தூக்கிட்டு தற்கொலை!

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான்(71). இவர் கடந்த சில வாரங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகாததால் மன வருத்தத்தில் இருந்தவர் நேற்று(செப்.18) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 5, 2026
திருப்பூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News March 5, 2026
திருப்பூர் வருகை தரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை 07.03.2026 அன்று நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
News March 5, 2026
உடுமலையில் சத்யராஜ் மகள் போட்டியா?

2026 சட்டமன்றத் தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் விருப்பமனு அளித்துள்ளார். உடுமலைப் பகுதியோடு குடும்ப ரீதியான நெருங்கிய தொடர்பு கொண்ட இவர், தற்போது தீவிர அரசியலில் இறங்கியிருப்பது அத்தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


