News September 19, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,19) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை குறித்த புகார்களுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்! கொஞ்சம் அலெர்ட்டாக இருங்க மக்களே!
Similar News
News September 19, 2025
ராணிப்பேட்டை: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

ராணிப்பேட்டை மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க..
News September 19, 2025
ராணிப்பேட்டை மாவட்ட மழை நிலவரம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் – 19 )மழை நிலவரம் ராணிப்பேட்டை 42.6 mm , பாலர் அணைக்கட்டு 36.2 mm, வாலாஜா 70 mm , அம்மூர் 25 mm, ஆற்காடு 90.2 mm, அரக்கோணம் 20.8 mm, மின்னல் 47.4 mm, காவேரிப்பாக்கம் 58.2 mm, பனப்பாக்கம் 97.2 mm, சோளிங்கர் 26.8 mm, கலவை 68.2 mm என்ற நிலையில் மழை பதிவாகி உள்ளது.
News September 19, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை காவல்துறை இன்று சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் தற்போது ஆறுகள், ஏரிகள்,குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியாமல் இறங்குவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுகிறது. எனவே நீர்நிலைகளில் குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோர் கண்காணித்து உறுதிசெய்திட வேண்டும்..! என மாவட்ட மக்களுக்கு விழிப்புணர் செய்தி வெளிப்படுத்தியுள்ளது.