News September 19, 2025

மயிலாடுதுறை 950 வாக்குச்சாவடி மையங்கள் -ஆட்சியர்

image

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியனருக்கான கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் ஆகிய 3 தொகுதிகளில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து 862 இருந்த வாக்குச்சாவடிகள் 950 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

மயிலாடுதுறை: திமுகவில் இனைந்த மாற்று கட்சினர்

image

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திமுக குத்தாலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் AR ராஜா ஏற்ப்பாட்டில், நேற்று முஸ்டக்குடி கிராமம் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க துணைத் தலைவர், அதிமுக கிளை செயலாளர் பழனி உள்ளிட்ட 75க்கும் மேற்ப்பட்டோர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் பலர் உடன் இருந்தனர்.

News March 3, 2026

மயிலாடுதுறை: மின் நிறுத்தம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்க்காடு மற்றும் மூவலூர் பகுதிகளில், இன்று (மார்ச்.3) செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News March 3, 2026

மயிலாடுதுறை: தேர்வு மையத்தில் ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு

image

சீர்காழி ஆணைக்காரன் சத்திரம் சந்தைபடுகை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (58), ஆயங்குடிபள்ளம் வெங்கடேச மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று நடைபெற்ற பிளஸ் டூ தேர்வுக்கான பறக்கும் படை அலுவலராக நியமிக்கப்பட்டு சீர்காழியில் உள்ள பள்ளியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

error: Content is protected !!