News September 19, 2025
RoboShankar வீட்டில் நடக்க இருந்த விசேஷம்; கடைசி நேரத்தில்..

மகள் இந்திரஜாவின் மகனும், தன்னுடைய பேரனுமான நட்சத்திரனுக்கு நாளை மறுதினம் காதுகுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார் ரோபோ ஷங்கர். ஆனால், அது நடக்கும் முன்பே திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், பேரனின் காதுகுத்து நிகழ்வை பார்க்கும் கொடுப்பினை கூட அவருக்கு இல்லாமல் போய்விட்டதே என குடும்பத்தார் வருந்துகின்றனர்.
Similar News
News March 4, 2026
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி.. சு.வெங்கடேசன் எதிர்ப்பு

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தில் நுழைவு வாயிலுக்கு ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயர் வைத்துள்ளதற்கு சு.வெங்கடேசன் MP கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கர்தவ்ய த்வார்’ என்றால் தமிழில் ‘கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள் என குறிப்பிட்ட அவர், பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தி திணிப்பு மட்டுமே என்றும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழில் பெயர் சூட்டவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 4, 2026
சர்ச்சை விவகாரம்.. முதல் முறையாக விஜய் பேசினார்

தஞ்சை தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ‘ஜன நாயகன்’ பட சென்சார் சர்ச்சை குறித்து முதல்முறையாக விஜய் மௌனம் கலைத்துள்ளார். கரூர் விவகாரம் முதல் ஜன நாயகன்’ வரை தன்மீது பழி மேல் பழி போடப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸ் பிரச்னையில் தனக்காக ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கும், முக்கியமாக பூசி மெழுகி குரல் கொடுத்த CM ஸ்டாலினுக்கும் நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 4, 2026
9 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது.. அச்சச்சோ

மத்திய கிழக்கிலுள்ள போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் <<19293844>>பங்குச்சந்தை<<>> கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட ₹9.5 லட்சம் கோடியை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. டாடா ஸ்டீல், Ultratech, இண்டிகோ போன்ற நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே நேரத்தில், பாதுகாப்பு துறை பங்குகள் மட்டும் 5% – 13% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


