News September 19, 2025

புதுச்சேரி: முதியோர்களை காப்பது சமூகப் பொறுப்புணர்வு

image

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தட்டாஞ்சாவடி பகுதியில் நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முதியோா்களைக் காப்பதும் அன்பு செலுத்துவதும், விதவைகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வதும் மனித நேயமிக்கது. சமூகப் பொறுப்புணா்வு மிக்கது. புதுவையில் முதியோா்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.45 கோடி செலவாகிறது.

Similar News

News September 19, 2025

புதுவை: மாப்பிள்ளையை கொன்ற கும்பல் கைது

image

வில்லியனுார் அருகே கொலை வழக்கில் தம்பி தலைமறைவாகியுள்ள நிலையில், நேற்று முன்தினம் அவரது அண்ணன் சவுந்தரை ஒரு கும்பல் வழிமறித்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. இந்த கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கு விசாரணையில் வில்லியனூர் போலிசார் புதுச்சேரியை சேர்ந்த முக்கிய ரவுடிகள் ஆறு பேர் கொண்ட கும்பலை இன்று கைது செய்தனர்.

News September 19, 2025

புதுச்சேரி: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை!

image

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் செப்.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். SHARE NOW!

News September 19, 2025

புதுவையில் சிறுமியை கர்ப்பமாகிய தொழிலாளி

image

புதுவை மூலக்குளம் ரிஷிகுமார் (வயது 18). கூலித்தொழிலாளி. இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சிறு மியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்தநிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் போக்சோ சட்டத்தில் ரிஷிக்குமாரை கைது செய்தனர்.

error: Content is protected !!