News September 19, 2025

திருவள்ளூர்: மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் மூதாட்டி பலி

image

ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் குரு வயல் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சம்மந்தன். இவரது மனைவி மல்லிகா(60). இருவரும் தங்களது விவசாய நிலத்தில் சுற்றிப் பார்வையிட்டு நேற்று (செப்டம்பர் 18) மாலை வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மாலை கனமழை பெய்து மின்னல் தாக்கியதில் மூதாட்டி மல்லிகா சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 19, 2025

திருவள்ளூர்: TCS, WIPRO, Cognizantல் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் ServiceNow Developer மற்றும் Salesforce Developer சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறுகிய கால இந்த பயிற்சியில் உதவித்தொகை மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும். B.sc (computer/IT), B.E/B.Tech படித்த மாணவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணபிக்கலாம். TCS, WIPRO மற்றும் Cognizant நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஷேர் பண்ணுங்க

News September 19, 2025

திருவள்ளூர்: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

image

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்கை கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க

News September 19, 2025

திருவள்ளூர்: பருவமழைக்கு முன்பே நிரம்பும் ஏரிகள்…!

image

திருவள்ளூர், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே, புழல் ஏரி நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளில் நீர்வளத்துறையினர் சுணக்கமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இது, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது, புழல் ஏரியில், 2.99 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.

error: Content is protected !!