News September 19, 2025
திருப்பூர்: ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி!

திருப்பூர்: வஞ்சிபாளையம் சோமனூர் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
பல்லடம் தொகுதியில் இவரா?

பல்லடம் சட்டமன்றத் தொகுதியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, பல்லடம் திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
News March 3, 2026
அவிநாசி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

கோவை ரத்தனபுரி, தாசப்பன் வீதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (41). தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவினாசி அருகே கொச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, அவருக்கு பின்னால் வந்த லாரி, ஸ்டீபன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த ஸ்டீபன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
உயிரிழந்தார்.
News March 3, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.2) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


