News September 19, 2025
திருப்பூர்: ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி!

திருப்பூர்: வஞ்சிபாளையம் சோமனூர் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 19, 2025
திருப்பூர் மக்களே இனி எளிதாகிறது!

பொதுமக்களின் பயண வசதிக்காக ரயில்வே துறையுடன் இணைந்து ரயில் பயணிகள் முன்பதிவு சேவை இந்திய அஞ்சல் துறை மூலம் திருப்பூர் காந்தி நகரில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, தக்கல் முன்பதிவு சேவைகள் எளிதாக வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் பகுதி பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
திருப்பூர் கலெக்டர், மேயர் உள்ளிட்டோர் உறுதிமொழி

திருப்பூர்: தூய்மை மிஷன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நாடாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று மாவட்ட கலெக்டர் , மாநகராட்சி ஆணையாளர் , மேயர் உள்ளிட்டோர் தூய்மை பாரத இயக்கம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
News September 19, 2025
திருப்பூர்: தீரா நோயால் தூக்கிட்டு தற்கொலை!

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான்(71). இவர் கடந்த சில வாரங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகாததால் மன வருத்தத்தில் இருந்தவர் நேற்று(செப்.18) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.