News September 19, 2025

காஞ்சி: மாணவிக்கு பாலியல் தொல்லை!-அதிகாரி கைது!

image

காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 வயது மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சென்னைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, பின்னால் அமர்ந்திருந்த ராகேஷ் என்பவர் இவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பேருந்து ஓட்டுநர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க போலீசார் ராகேஷை கைது செய்தனர். இவர் வேளாண் அதிகாரியாக உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Similar News

News September 19, 2025

காஞ்சி: ரூ.25,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

image

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டர் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் SSLC படித்திருக்க வேண்டும். 18-35 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.15,000-25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 19, 2025

காஞ்சிபுரத்தில் இவ்வளவு மழையா?

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. பதிவான மழையின் விவரங்கள். 1.காஞ்சிபுரம் – 6.6 செமீ 2.உத்திரமேரூர் – 5 செமீ 3.செம்பரம்பாக்கம் – 5 செமீ, 4.குன்றத்தூர் 4.3 செமீ, 5.வாலாஜாபாத் – 3.7 செமீ, 6.ஸ்ரீபெரும்புதூர் 3.8 செமீ மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லிட்டு போங்க!

News September 19, 2025

காஞ்சிபுரம்: இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை!

image

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,19) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை குறித்த புகார்களுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்! கொஞ்சம் அலெர்ட்டாக இருங்க மக்களே!

error: Content is protected !!