News April 12, 2024
தமிழகத்தில் கனமழை கொட்டுகிறது

கோடை வாட்டி வதைத்துவந்த சூழலில் இரண்டு நாள்களாக கிழக்கு காற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், விருதுநகர், புதுக்கோட்டை, நாகை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை இல்லாத பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
எச்சரிக்கை! இயர்போனை அதிகம் யூஸ் பண்றீங்களா?

செல்போன் மட்டுமல்ல, இயர்போனும் இப்போது உடலின் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டது. பலரும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இயர்போனை பயன்படுத்துகின்றனர். அப்படி கடந்த 3 ஆண்டுகளாக தினம் 12 மணிநேரம் இயர்போன் பயன்படுத்திய ஒரு இளம்பெண், கேட்கும் திறனை இழந்துள்ளதுடன், காதில் ‘டின்’ என்ற சத்தம் மட்டுமே கேட்பதாக SM-ல் பகிர்ந்துள்ளார். நீங்கள் எப்படி? எவ்வளவு நேரம் இயர்போன் யூஸ் பண்றீங்க?
News November 8, 2025
அடுத்த ராஜேந்திர சோழன் உதயநிதி: துரைமுருகன்

ராஜராஜன் மன்னராக இருந்தபோதே ராஜேந்திர சோழன் மன்னராகி அதிக நிலப்பரப்பை வென்றார்; அதேபோல், ஒருநாள் ராஜேந்திர சோழனாக உதயநிதி மாறுவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் உதயநிதி வருவார். அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி, இப்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினை விட சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவராக இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
ROOM போட்டு பேசுங்கள்: நடிகை கஸ்தூரி

கோவை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது. ஒரு பேட்டியில் அவர், நேரங்கெட்ட நேரத்தில் பெண்கள் வெளியில் சுற்றக்கூடாது. தவிர்க்கவே முடியாத சூழல் என்றால் ROOM போட்டு பேசுங்கள் என்றும், ஆண்களோ, பெண்களோ அவரவர்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அட்வைஸ் அளித்துள்ளார்.


